Translate

புதன், அக்டோபர் 26, 2016

ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்

ஹனுமன் என்று பெயர் வரக்காரணம்

ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்கும் பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன் பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர் அனுமன்.

🐒 அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர்.

🐒 சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🐒 சமஸ்கிருதத்தில் 'ஹனு" என்பதற்கும் 'தாடையும்", 'மன்" என்பதற்கு 'பெரிதானதது" என்பதால், 'ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.

🐒 இன்னொரு வழக்கில் 'ஹன்" என்பதற்கு 'கொன்றவன்", 'மானம்" எனபதற்கு 'தற்பெருமை" என்பதால், 'ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர் காரணம் உண்டு.

🐒 ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பது தான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.

🐒 ஆஞ்சநேயருக்கு சொல்லின் செல்வன், ராம தூதுவன் என்று பல பெயர்கள் உண்டு. இவர் காற்று, நீர், நிலம், ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பு+தங்களையும் வென்றவர். இவரை வழிபட்டால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

தர்ம சாஸ்திரம் கூறும் அறிவுரைகள் :

🌀 சு+ரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக்கூடாது.

🌀 தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக்கூடாது.

🌀 நெருப்பை வாயால் ஊதக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக